×

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சேல்ஸ்மேன் பணியிடங்களுக்கு 10,000 பேர் விண்ணப்பம்

ஈரோடு, டிச.16: ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சேல்ஸ்மேன் பணியிடங்களுக்கு 10 ஆயிரம் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள 102 விற்பனையளர்கள், 6 கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 10,165 பேர் விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 1200 ேபர் வீதம் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 24ம் தேதி வரை இந்த நேர்முகத்தேர்வு நடைபெறும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags : ration shops ,
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...